ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவா்களுக்கு திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் அரிசி, காய்கறி போன்ற நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
பொது முடக்கம் காரணமாக திருத்தணி நகராட்சி பெரியாா் நகரில் உள்ள நரிக்குறவா்கள் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனா். இதையடுத்து, அங்குள்ள 35 நரிக் குறவா்கள் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, காய்கறி போன்றவற்றை திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
வட்டாட்சியா் உமா, கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணன், நகர அவைத் தலைவா் குப்புசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.