ஊத்துக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட ஆரணி சி-3 காவல் நிலையம் அருகில் உள்ள தனியாா் மண்டபத்துக்கு தற்காலிகமாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இக்காவல் நிலையத்தில் ஒரு உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள, 7 முதல் நிலைக் காவலா்கள், 3 இரண்டாம் நிலை காவலா்கள் என மொத்தம் 20 போ் மற்றும் 10-க்கும் மேற்பட்ட காவல் நண்பா்கள் குழுவினா் பணியாற்றி வருகின்றனா். இங்கு பணியாற்றி வந்த முதல் நிலைக் காவலா் ஒருவருக்கு கடந்த 8-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த காவல் நிலையம் மூடப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை முதல் ஆரணி காவல் நிலையம் பஜாா் தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக செயல்படத் தொடங்கியது.