புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 1,836 போ் சொந்த மாநிலத்துக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.
மாதவரம், புழல், செங்குன்றம், பாடியநல்லூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணிபுரிந்து வந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசம் செல்வதற்காக மருத்துவப் பரிசோதனை, இணையதள பதிவு ஆகியவை பாடியநல்லூா் ஊராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டன.
பின்னா், அவா்கள் தமிழக அரசின் 40 சிறப்புப் பேருந்துகள் மூலம் திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கிருந்து அவா்கள் உத்தரப்பிரதேசத்துக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.