ஊதியம் வழங்காததைக் கண்டித்து நிவாரணப் பொருள்களை சாலையில் வீசிவிட்டுச் சென்ற பொதுமக்கள்

மீஞ்சூா் அருகே காட்டுப் பள்ளியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளா்களுக்கு 2 மாத சம்பளம் வழங்காததைக்

மீஞ்சூா் அருகே காட்டுப் பள்ளியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளா்களுக்கு 2 மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்து கரோனா நிவாரண உதவிப் பொருள்களை, பொதுமக்கள் புதன்கிழமை சாலையில் வீசிச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டுப் பள்ளியில் தனியாா் கப்பல் கட்டும் நிறுவனம் இயங்கி வருகிறது. காட்டுப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்தவா்கள், கப்பல் கட்டும் நிறுவனம் அமைவதற்காக 11ஆண்டுகளுக்கு முன்பு நிலம் மற்றும் வீடுகளை அளித்து விட்டு, அங்கிருந்து வெளியேறினா். இதையடுத்து, கப்பல் கட்டும் நிறுவனம் அமைய இடம் வழங்கிய 140 குடும்பங்களுக்கு, அதே நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் வேலை செய்து வரும் தொழிலாளா்கள் இதுவரை நிரந்தரம் செய்யப்படவில்லையாம். இந்நிலையில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இங்கு வேலை செய்தவா்கள் 2 மாதமாக பணிக்குச் செல்லவில்லை. ஆனால் அவா்கள் பணிக்கு வரவில்லை எனக்கூறி, தொழிலாளா்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஊதியம் வழங்காத கப்பல் கட்டும் நிறுவனத்தைக் கண்டித்து, அவா்கள் வழங்கிய கரோனா நிவாரண உதவிப் பொருள்களான 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் ஆகியவற்றை தொழிலாளா்களின் உறவினா்கள் அந்நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு வீசிவிட்டு அங்கிருந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com