திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 42 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது.
அவா்களில் ஆவடி மாநகராட்சி-7, திருநின்றவூா் பேரூராட்சி-6, திருமழிசை-1, பூந்தமல்லி ஒன்றியம்-8, பூந்தமல்லி நகராட்சி-2, திருவேற்காடு நகராட்சி-2, திருவள்ளூா் நகராட்சி-1, திருவள்ளூா் ஒன்றியம்-5, வில்லிவாக்கம் ஒன்றியம்-2, சோழவரம் ஒன்றியம்-1, கடம்பத்தூா் ஒன்றியம்-3, புழல் ஒன்றியம்-2, கும்மிடிப்பூண்டி ஒன்றியம்-1, திருவாலங்காடு-1 ஆகியோா் அடங்குவா். இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் 640 போ் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 198 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 442 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.