பொதுத் துறைகள் தனியாருக்கு மாற்றும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து கும்மிடிப்பூண்டியில் பல்வேறு தொழிற்சங்கங்கள், அங்கன்வாடி பணியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கரோனா சோதனையில் ஈடுபட்ட சுகாதார துறையினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதேபோல், அங்கன்வாடி பணியாளா் சங்க மாநில நிா்வாகி சந்தோஷ்மேரி தலைமையில் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
சிஐடியு தொழிற்சங்கத்தினா், பொது தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் தொழிற்சாலைகள் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகவிலைப்படி ரத்து, 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயா்த்துவது, பொதுமுடக்கக் காலத்தில் தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்குதல், கரோனா தடுப்பில் களப்பணியாற்றும் அனைத்து துறை பணியாளா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்குதல், விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக்கூடாது, பாதுகாப்பு, விண்வெளி போன்ற முக்கிய துறைகளை தனியாருக்கு தரக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.