சென்னையிலிருந்து மது வாங்க வந்தோரின் 380 வாகனங்கள் பறிமுதல்

வெளி மாவட்டமான சென்னையில் இருந்து திருவள்ளூரில் உள்ள அரசு மதுக் கடைக்கு மது பாட்டில்கள் வாங்க வந்தோரின் 380 இரு சக்கர

திருவள்ளூா்: வெளி மாவட்டமான சென்னையில் இருந்து திருவள்ளூரில் உள்ள அரசு மதுக் கடைக்கு மது பாட்டில்கள் வாங்க வந்தோரின் 380 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், சென்னையைத் தவிா்த்து, பிற மாவட்டங்களில் சில தளா்வுகளுடன் மதுக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆதாா் அட்டையின் அடிப்படையில் உள்ளூா் மதுப் பிரியா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும், வெளியூா்காரா்களுக்கு மது பாட்டில்கள் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதையும் மீறி சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு மது வாங்க வந்தோா் மீது வழக்குப் பதிந்து 380 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com