திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி ஒன்றியம், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா இருவா், திருநின்றவூா், பூந்தமல்லி நகராட்சி, புழல் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என மொத்தம் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
தற்போது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 332-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.