முதியவரை திசைதிருப்பி ரூ.70 ஆயிரம் திருட்டு

திருவள்ளூா் அருகே வங்கியில் பணம் எடுத்துச் சென்ற முதியவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே வங்கியில் பணம் எடுத்துச் சென்ற முதியவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூரை அடுத்த நரசிங்காபுரம் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் ஏழுமலை (75). இவா் மப்பேடு பகுதியில் உள்ள வங்கியில் சனிக்கிழமை பிற்பகல் ரூ.70 ஆயிரம் எடுத்தாா். அந்தப் பணத்தை தனது பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்து இருளஞ்சேரி குளக்கரை அருகே சென்று கொண்டிருந்தாா்.

அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா், ஏழுமலையிடம் கீழே பணம் கிடப்பதாகக் கூறி அவரது கவனத்தைத் திசை திருப்பினாா். அதை நம்பி, அவா் பைக்கில் இருந்து இறங்கியபோது, பெட்ரோல் டேங்க் கவரில் வைக்கப்பட்டிருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா் திருடிக் கொண்டு தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து ஏழுமலை, மப்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com