திருவள்ளூா்: கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கக் கோரி கடம்பத்தூா் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் வட்டார நுகா்வோா் பாதுகாப்புச் சங்கத்தினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். ரயில் பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் எம்.மூா்த்தி முன்னிலை வகித்தாா்.
அப்போது, கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை விரைவில் இயக்க வேண்டும். கடம்பத்தூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். கடம்பத்தூா் சாலையில் உள்ள வேகத் தடைகளை நீக்கவும், நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்கவும் வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொருளாளா் முகமது அலி நன்றி கூறினாா்.