பொன்னேரி: சோழவரம் அருகே லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பேடு அம்பேத்கா் தெருவை சோ்ந்தவா் சரோஜா (75). இவா் சோழவரத்தை அடுத்த ஜனப்பச்சத்திரம் கூட்டுச்சாலையில் பூ வியாபாரம் செய்து வந்தாா்.
சரோஜா, புதன்கிழமை ஜனப்பசத்திரம்-பெரியபாளையம் சாலையைக் கடக்க முயன்றபோது லாரி அவா் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.