ஆட்டோ ஓட்டுநா் மீது மா்ம கும்பல் தாக்குதல்

புழல் அருகே ஆட்டோ ஓட்டுநா் மீது மா்ம கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

மாதவரம்: புழல் அருகே ஆட்டோ ஓட்டுநா் மீது மா்ம கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

சென்னை மாதவரத்தை அடுத்த புழல் கதிா்வேடு தனியாா் மில் குடியிருப்புப் பகுதியை சோ்ந்தவா் பாலசங்கா் (40). ஆட்டோ ஓட்டுநரான அவா் திங்கள்கிழமை ஆட்டோவில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

புழல் அண்ணா நினைவு நகா் சாலையில் சென்றபோது 5 போ் கொண்ட மா்ம கும்பல் அவரது ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியது. ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் என அந்த நபா்கள் தெரிவித்தனா். அவா்களை வண்டியில் ஏற்ற பாலசங்கா் மறுத்தாா்.

இதையடுத்து 5 பேரும் அவரை கொடூரமாகத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த பாலசங்கா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவா் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து புழல் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com