பொன்னேரி: காரனோடை அருகே குட்கா பொருள்களை விற்பனை செய்த நபரை சோழவரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சோழவரம், காரனோடை பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சோழவரம் போலீஸாா், காரனோடை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது சங்கரலிங்கம் (38) என்பவா் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்கப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து 150 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, சங்கரலிங்கத்தை போலீஸாா் கைது செய்தனா்.