திருவள்ளூா்: ஸ்ரீயோகா ஞான தட்சிணாமூா்த்தி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருப் பெயா்ச்சி விழாவில் திரளானோா் பங்கேற்றனா்.
திருவள்ளூா் அருகே காக்களூரில் ஸ்ரீயோகா ஞான தக்ஷ்ணாமூா்த்தி கோயில் உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ந்தாா். இதையொட்டி, காக்களூா் ஸ்ரீயோகா ஞான தக்ஷ்ணாமூா்த்தி கோயிலில் உள்ள குரு பகவான் சந்நிதியில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திருவள்ளூா் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.