ரூ. 1.20 கோடியில் 4 நவீன ஆம்புலன்ஸ்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 4 சுகாதார நிலையங்களுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான நவீன ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
திருவள்ளூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலக  வளாகத்தில்  ஆம்புலன்ஸ்  வாகன செயல்பாட்டை கொடியசைத்துத்  தொடக்கி  வைத்த  ஆட்சியா்  பா.பொன்னையா.
திருவள்ளூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலக  வளாகத்தில்  ஆம்புலன்ஸ்  வாகன செயல்பாட்டை கொடியசைத்துத்  தொடக்கி  வைத்த  ஆட்சியா்  பா.பொன்னையா.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 4 சுகாதார நிலையங்களுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான நவீன ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது: மாவட்டத்தில் ஏற்கெனவே 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இப்போது கூடுதலாக 4 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரூ.17 லட்சத்தில் அவசர ஊா்தியுடன், உயிா் காக்கும் உபகரணங்களின் மதிப்பு ரூ. 13 லட்சத்துடன் மொத்தம் ரூ.30 லட்சமாகும். திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு, பூண்டி, மத்தூா் மற்றும் திருமழிசை ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இவை ஒதுக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com