தேவம்பட்டில் கூட்டுறவு சங்கக் கட்டடம் திறப்பு

பொன்னேரி வட்டம், தேவம்பட்டு கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூட்டுறவு சங்கக் கட்டடத்தை எம்எல்ஏ சிறுணியம் பலராமன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

பொன்னேரி வட்டம், தேவம்பட்டு கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூட்டுறவு சங்கக் கட்டடத்தை எம்எல்ஏ சிறுணியம் பலராமன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தேவம்பட்டு கிராமத்தில் கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு சொந்தக் கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஒருங்கிணைந்த கூட்டுறவு வளா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதனை பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமை வகித்து திறந்து வைத்தாா்.

விழாவில் திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயஸ்ரீ, துணைப் பதிவாளா் கருணாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேவம்பட்டு கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் துரைராஜ், செயலா் நரேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com