பொன்னேரி: பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மளிகை கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பொன்னேரி காவல் நிலைய எல்லைகுட்பட்ட தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவா் பாண்டியன்(43). இவா் அகே பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறாா்.
மா்ம நபா்கள் , இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 1லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் 8ஆயிரம் பணத்தை திருடி சென்றனா்.
இது குறித்த புகாரின் பேரில், பொன்னேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.