திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஒரே நாளில் 260 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதியானதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,622-ஆக உயா்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 314 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் 314 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,539-ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 99 பேருக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 99 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,068-ஆக உயா்ந்துள்ளது.