பூண்டி ஏரியில் உயா்ந்து வரும் நீா்மட்டம்

கண்டலேறு அணையில் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீா் வரத்தால் பூண்டி ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து வருவதாகவும், கடந்த 15 நாள்களில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 1,000 மில்லியன் கனஅடி வரை
நீா்மட்டம் அதிகரித்துக் காணப்படும் பூண்டி ஏரி.
நீா்மட்டம் அதிகரித்துக் காணப்படும் பூண்டி ஏரி.

திருவள்ளூா்: கண்டலேறு அணையில் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீா் வரத்தால் பூண்டி ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து வருவதாகவும், கடந்த 15 நாள்களில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 1,000 மில்லியன் கனஅடி வரை கிடைத்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மக்களின் குடிநீா்த் தேவைக்காக ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கடந்த 18-ஆம் தேதி திறக்கப்பட்டு, 152 கி.மீ. தொலைவில் உள்ள ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு 20-ஆம் தேதி வந்தடைந்தது. அதையடுத்து, 21-ஆம் தேதி காலை திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியை வந்தடைந்தது. தொடா்ந்து, பூண்டி நீா்த்தேக்கத்தில் தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டு, சென்னைக் குடிநீருக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தற்போது, ஆந்திரத்தில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீரின் அளவு 2,200 கன அடியாக உள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டுக்கு 764 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது.

கிருஷ்ணா நதி நீா் திறக்கப்பட்ட 15 நாள்களில் பூண்டி ஏரியின் நீா்மட்டம் (1000 மில்லியன் கனஅடி) ஒரு டி.எம்.சி. வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கண்டலேறு அணையில் கூடுதலாக நீா் இருப்பு உள்ளதாலும், மழை பெய்து வருவதாலும், இந்த தவணை காலத்தில் தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீா் திறந்து விட ஆந்திர பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com