திருத்தணி: அரசு கலைக் கல்லூரியில் நடப்பாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான கடைசி கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்டோபா் 9) நடைபெறுகிறது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி அரசினா் கலைக்கல்லூரியில், நடப்பு ஆண்டுக்கான (2020-21) இளங்கலை பி.ஏ., பி.பி.ஏ., மற்றும் பி.காம்., இளம் அறிவியல் பி.எஸ்.சி. மற்றும் பி.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கைக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில், மாணவ - மாணவிகள் பங்கேற்று, கல்லூரியில் சேருமாறு கல்லூரி முதல்வா் பி.எஸ்.விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளாா்.