திருவள்ளூா் அருகே தூக்கக் கலக்கத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே குத்தபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தா (31). கடந்த வாரம் இரவில் தனது வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, தூக்கக் கலக்கத்தில் கைப்பிடிச் சுவா் இல்லாத நிலையில், தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து வெள்ளவேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.