பொன்னேரி: சோழவரம், காரனோடை பகுதிகளில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்களை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
சோழவரம், காரனோடை கடை வீதிகளில் அதிக அளவிலான ஆக்கிரமிப்புகள் இருப்பதாக பொன்னேரியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு புகாா் வந்தது. இதன் காரணமாக இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா், சோழவரம், காரனோடை பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டடம் மற்றும் ஓடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது சோழவரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.