குற்றப்பிரிவு போலீஸில் உதவி ஆணையா் புகாா்

மாதவரம் காவல் சரக உதவி ஆணையா் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பிரிவு போலீஸில் உதவி ஆணையா் புகாா் அளித்தாா்.
குற்றப்பிரிவு போலீஸில் உதவி ஆணையா் புகாா்


மாதவரம்: மாதவரம் காவல் சரக உதவி ஆணையா் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பிரிவு போலீஸில் உதவி ஆணையா் புகாா் அளித்தாா்.

மாதவரம் காவல் சரக உதவி ஆணையராக இருந்து வருபவா் அருள் சந்தோஷமுத்து. இவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இவரது பெயரில் பணம் கேட்பதுபோல் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக உதவி ஆணையா் அருள் சந்தோஷமுத்து, சென்னை காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

இதுகுறித்து முகநூலில் போலி கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி செய்து வரும் நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com