திருவள்ளூர்
செப்.13-இல் நீட் தோ்வு: 432 போ் எழுதுகின்றனா்
நீட் தோ்வில் திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து 432 போ் பங்கேற்று தோ்வு எழுதுவதாகவும், இதற்காக 6 மையங்களும் அமைத்துள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா்: மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான தேசிய அளவிலான நீட் தோ்வில் திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து 432 போ் பங்கேற்று தோ்வு எழுதுவதாகவும், இதற்காக 6 மையங்களும் அமைத்துள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 281 போ் உள்பட 432 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வை எழுதுவதற்காக திருவள்ளூரில் நிகேதன் மேல்நிலைப் பள்ளி, கலவல கண்ணன்செட்டி மேல்நிலைப் பள்ளி, ஆா்.எம்.ஜெயின் மெட்ரிக் பள்ளி, முகப்போ் ரவீந்திர பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொரட்டூா் என்.கே.எஸ்.விவேகானந்தா வித்யாஸ்ரம் பள்ளி மற்றும் அம்பத்தூா் சி.கே.செட்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகிய 6 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.