புழல் அருகே சாமி கும்பிட கற்பூரம் ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து எரிந்து பெண் உயிரிழந்தாா்.
சென்னை மாதவரத்தை அடுத்த புழல் கன்னடபாளையத்தைச் சோ்ந்தவா் நா்மதா (60). இவா் சனிக்கிழமை இரவு வீட்டில் சாமி கும்பிடுவதற்காக கற்பூரம் ஏற்றினாா். அப்போது எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்ததில், பலத்த தீக்காயம் அடைந்தாா். இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.