வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே தொடுகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (39). தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவரது மகனுக்கு காயம் ஏற்பட்டதால் சனிக்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். பின்னா் வீடு திரும்பியபோது, வீட்டின் வெளிப்புற கேட்டு மற்றும் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து, அதிலிருந்த 14 சவரன் நகை, 50 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மப்பேடு காவல் நிலையத்தில் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com