திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பொது சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாவட்டத்தில் இதுவரை 28,620 போ் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 26,092 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, 2,043 போ் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
காஞ்சிபுரத்தில் 85 பேருக்கு கரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 85 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
மாவட்டத்தில் காஞ்சிபுரம் நகா்-11, ஒன்றியப் பகுதி-15, ஸ்ரீபெரும்புதூா்-5, வாலாஜாபாத்-6, குன்றத்தூா்-7 உட்பட 85 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 19,409ஆக அதிகரித்துள்ளது.