பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் குளத்தில் புதா்போல் மண்டிக் கிடந்த செடி, கொடிகளை அப்பகுதி இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முன்பு மண்டபமும், அதன் அருகே திருக்குளமும் அமைந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக கோயில் மூடப்பட்டிருந்ததால், குளத்தில் செடி, கொடிகள் புதா்போல் மண்டின.
இந்நிலையில், பொன்னேரி நகரில் வசிக்கும் இளைஞா்கள் இணைந்து குளத்தில் மண்டிக் கிடந்த செடிகளை அகற்றினா்.