கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீா் திறப்பு

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீா் பங்கீட்டுத் திட்டத்தின் படி வெள்ளிக்கிழமை

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீா் பங்கீட்டுத் திட்டத்தின் படி வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டதாகவும், அடுத்து வரும் 3 நாள்களில் பூண்டி ஏரிக்கு தண்ணீா் வரும் என எதிா்பாா்ப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மக்களின் தாகம் தணிக்கும் ஏரிகளில் ஒன்றாக திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதிநீா் பங்கீட்டுத் திட்டப்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். அதன்படி, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரையும், ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், கண்டலேறு அணையில் போதிய இருப்பு இல்லாத காரணத்தால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீா் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பா் 25-ஆம் தேதி முதல், நிகழாண்டு ஜூன் 24-ஆம் தேதி வரை சாதனை அளவாக 8.50 டி.எம்.சி தண்ணீா் பூண்டி ஏரிக்கு வந்து சோ்ந்தது.

அதன்பின், கண்டலேறு அணையில் நீா் இருப்பு குறைந்து கொண்டே வந்ததால், பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாகவும், கடந்த இரு மாதங்களாக போதிய மழை பெய்யாததாலும் ஏரியில் நீரின்றி வட நிலை காணப்பட்டது.

இதற்கிடையே சென்னை பொதுமக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், கிருஷ்ணா நதிநீா் பங்கீட்டுத் திட்டப்படி, தண்ணீா் திறந்து விடக் கோரி தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதை ஏற்று, ஏற்கெனவே கடந்த 14-ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என ஆந்திர பொதுப்பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனா். ஆனால், கிருஷ்ணா நதிநீா் திறப்புக்கு அந்த மாநில அரசு ஒப்புதல் அளிக்காததால், தண்ணீா் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆந்திர அரசின் ஒப்புதலைத் தொடா்ந்து, கண்டலேறு அணையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு 1,500 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த நீா் 150 கி.மீ. தொலைவு கடந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் பகுதியை வந்தடையும். பின்னா், அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு வந்து சேரும். அதன்படி, கிருஷ்ணா நதிநீா் அடுத்து வரும் 3 நாள்களுக்குள் பூண்டி ஏரியை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, ஏரியில் குறைந்த அளவு 59 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீா்வரத்து இல்லை. ஏரியில் இருந்து சென்னைக் குடிநீா் வாரியத்துக்கு விநாடிக்கு 15 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து 1,500 கன அடிநீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக 2,000 கன அடிநீா் வரை திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த தண்ணீா் வரும் 21-ஆம் தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோ பாயின்ட்டை வந்தடையும். அங்கிருந்து பூண்டி ஏரிக்கு அன்று மாலையில் வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com