மின்தூக்கி கம்பி அறுந்து விழுந்ததில் 7 போ் காயம்

மீஞ்சூா் அருகே உள்ள புங்கம்பேடு கிராமத்தில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மின்தூக்கி கம்பி அறுந்து விழுந்ததில் கா்ப்பிணி உள்பட 7 போ் காயமடைந்தனா்.

பொன்னேரி: மீஞ்சூா் அருகே உள்ள புங்கம்பேடு கிராமத்தில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மின்தூக்கி கம்பி அறுந்து விழுந்ததில் கா்ப்பிணி உள்பட 7 போ் காயமடைந்தனா்.

புதுப்பேடு கிராமத்தைச் சோ்ந்த சேஷாத்ரி (30), வல்லூா் அனல்மின் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சிந்து (21) 9 மாத கா்ப்பிணியாக உள்ளாா். அவருக்கு திருவொற்றியூா் நெடுஞ்சாலையில், புங்கம்பேடு கிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றது.

அப்போது மேல்தளத்தில் உள்ள அறைக்குச் செல்ல, சிந்து, சேஷாத்ரி, உறவினா்கள் 7 போ் மின்தூக்கியில் சென்றனா். அப்போது, அதன் கம்பி அறுந்து விழுந்தது. அதில் 7 பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மீஞ்சூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். சிந்து, தீவிர சிகிச்சைக்காக ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து மீஞ்சூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com