பேரிடா் காலத்தில் மக்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்புத் துறை சாா்பில் புழல் ஏரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை புகா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் பாலசுப்பிரமணியன் மேற்பாா்வையில், உதவி மாவட்ட அலுவலா் தனபால் தலைமையில், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதால், மழைக்காலங்களில் பேரிடரில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்களைக் காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி புழல் ஏரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரா்கள் 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, இந்த ஒத்திகை நிகழ்ச்சியை, பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன், வருவாய் ஆய்வாளா் ஜெயகா்பிரபு, பேரூராட்சி செயல் அலுவலா் கோ.சதீஷ், சுகாதார ஆய்வாளா் மதியழகன், காவல் ஆய்வாளா் ஜவஹா்பீட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.