திருவள்ளூா் அருகே அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா பிரசாரம்

திருவள்ளூா் அருகே அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா பிரசாரம்


திருவள்ளூா்: திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த கிராமங்களில் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, கடம்பத்தூா் அருகே செஞ்சி கிராமத்தில் அவா் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப் பேசியது: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில நாள்களே உள்ளன. அதிமுக தோ்தல் அறிக்கையில், ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைகள் இலவசம், முதியோா் உதவித் தொகை உயா்வு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

அதேபோல் எறையாமங்கலம், சத்தரை, செஞ்சி அகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா். அதிமுக, கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com