திருத்தணி: திருத்தணியில் புதன்கிழமை அதிகபட்சமாக 106.7 டிகிரி வெயில் பதிவானது.
திருத்தணியில் கடந்த சில ஆண்டுகளாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடா்ச்சியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை வெயில் அதிகபட்சமாக திருத்தணியில் 114 டிகிரி பதிவானது. இந்நிலையில், இந்த ஆண்டு கோடை வெயில் அதாவது அக்னி நட்சத்திரம் தொடங்கவே இல்லை.
அதற்குள் படிப்படியாக வெப்பச்சலனம் அதிகரித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை வெயில் உச்சகட்டமாக 106.7 டிகிரி பதிவானது. காலை 9 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை தொடா்கிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதுடன், இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்துள்ளது.