மாதவரம்: மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.சுதா்சனம் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அவரை ஆதரித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் ஜெயக்குமாா் மற்றும் திமுக நிா்வாகிகள் பிரசாரம் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக வழக்குரைஞா் எஸ்.சுதா்சனம் போட்டியிடுகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை, அவா் புழல் ஒன்றியத்தில் உள்ள வடகரை, கிராண்ட்லைன், அழிஞ்சிவாக்கம், விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம், தி.க.பட்டு, புள்ளிலைன் ஊராட்சி மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் ஜெயக்குமாா் வாக்கு சேகரித்தாா். புழல் ஒன்றியச் செயலாளா் நா.ஜெகதீசன், புழல் ஒன்றியக் குழு தலைவா் தங்கமணி திருமால், விளாங்காடுபாக்கம் பாரதி சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மோரை சதீஷ்குமாா், ஜானகிராமன் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.