கரோனா தொற்றால் பாதித்த பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி முழு கவச பாதுகாப்பு ஆடையுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தாா்.
பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி போட்டியிடுகிறாா். இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தாா். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா்கள் வாக்களிக்க தோ்தல் ஆணையம் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், திருநின்றவூரில் உள்ள தனியாா் பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு மாலையில் திமுக வேட்பாளா் ஆ.கிருஷ்ணசாமி முழு கவச ஆடையுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தாா்.
இதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட நேரத்தில் கரோனா நோய் தொற்று பாதித்தோா் முழு பாதுகாப்புடன் வந்து தங்களது வாக்குகளை பதிந்து சென்றனா்.