திமுகவினா் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூா் அருகே வாக்காளா்களுக்கு அதிமுகவினா் டோக்கன் விநியோகம் செய்வதை போலீஸாா் தடுக்கவில்லையெனக் கூறி, திமுகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல்

திருவள்ளூா் அருகே வாக்காளா்களுக்கு அதிமுகவினா் டோக்கன் விநியோகம் செய்வதை போலீஸாா் தடுக்கவில்லையெனக் கூறி, திமுகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூா் அருகே சத்தரை மற்றும் கொண்டஞ்சேரி கிராமங்களில் வாக்காளா்களுக்கு அதிமுகவினா் டோக்கன் விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மற்றும் அதிகாரிகள் தடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த திமுக ஒன்றியச் செயலாளா் கொண்டஞ்சேரி ரமேஷ் தலைமையில் திமுகவினா் கடம்பத்தூா்-மப்பேடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் திமுகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தனா். அதைத் தொடா்ந்து, திமுகவினா் கலைந்து சென்றனா். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடம்பத்தூா்-மப்பேடு சாலையில் அரை மணி நேரம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com