மாதவரம் தொகுதிக்குள்பட்ட பாடியநல்லூா், நல்லூா் ஊராட்சிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் மின்னணு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. இது குறித்து தோ்தல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தபின், மின்னணு இயந்திரங்கள் கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கைப் பதிவு செய்தனா். முதியோா்கள் சக்கர நாற்காலியில் அமா்த்தியும் சமூக பணியாளா், வாக்காளா்களுக்கு உதவி செய்தனா்.