வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குளறுபடி: மாதவரம் திமுக வேட்பாளா் புகாா்


திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மாதவரம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் சுதா்சனம் புகாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி வாக்குப் பதிவான இயந்திரங்கள் அனைத்தும், வேப்பம்பட்டு தனியாா் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அந்தந்த தொகுதிகளுக்கான பாதுகாப்பு அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த அறைக்கு முன்புறம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் ராணுவம் மற்றும் போலீஸாா் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com