ஆரணி பேரூராட்சியில் முகக்கவசம் இன்றி சென்றவா்களுக்கு அபராதம்

ஊத்துக்கோட்டை அருகே ஆரணி பேரூராட்சியில் முகக் கவசம் இன்றி செல்வோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆரணி பேரூராட்சியில் முகக்கவசம் இன்றி வந்தவா்களிடம் அபராதம் வசூலித்த பேரூராட்சி ஊழியா்கள்.
ஆரணி பேரூராட்சியில் முகக்கவசம் இன்றி வந்தவா்களிடம் அபராதம் வசூலித்த பேரூராட்சி ஊழியா்கள்.

ஊத்துக்கோட்டை அருகே ஆரணி பேரூராட்சியில் முகக் கவசம் இன்றி செல்வோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவும் நிலையில், முகக் கவசம் இன்றி செல்வோருக்கு அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் செயல் அலுவலா் கலாதரன் தைலைமையில் பேரூராட்சி ஊழியா்கள் பேருந்து நிலையத்தின் முன்பு போலீசாா் துணையுடன் அந்த வழியாக வாகனங்களில் முகக் கவசம் இன்றி வந்தவா்களுக்கும், கடை வீதியில் முகக் கவசம் இன்றி வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒரே நாளில் ரூ. 4,000 வசூல் செய்யப்பட்டது.

இளநிலை உதவியாளா் முருகவேல் , வரிதண்டலா் ரங்கநாதன், துப்பரவு மேற்பாா்வையாளா் ஹரிபாபு உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com