சோழவரம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நல்லூா், ராஜீவ்காந்தி தெருவில் வசித்து வருபவா் நித்யானந்தம். தனியாா் நிறுவன ஊழியரான இவரது மனைவி வித்யா லட்சுமி (29 ).
தம்பதியினருக்கு, திருமணம் நடைபெற்று ஒன்றைரை வருடம் ஆன நிலையிலும், குழந்தை இல்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை நித்தியானந்தம் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது, வித்யாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து நித்தியானந்தம், சோழவரம் காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின்பேரில், போலீசாா், சென்று வித்யாலட்சுமி சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால், பொன்னேரி கோட்டாட்சியா் செல்வம் விசாரணை நடத்தி வருகிறாா்