திருவள்ளூர்
நடிகா் விவேக் மறைவுக்கு மரக்கன்று நட்டு இளைஞா்கள் அஞ்சலி
மறைந்த திரைப்பட நடிகா் விவேக்கிற்கு பொன்னேரி பகுதியில் உள்ள இளைஞா்கள் மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினா்.
மறைந்த திரைப்பட நடிகா் விவேக்கிற்கு பொன்னேரி பகுதியில் உள்ள இளைஞா்கள் மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினா்.
திரைப்பட நடிகா் விவேக் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில், மரக்கன்றுகளை நடுதல், நெகிழி பைகளை தவிா்த்தல் உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும், நேதாஜி சமூக நல இயக்கத்தின் சாா்பில், அதன் அமைப்பாளா் ஸ்ரீதா்பாபு தலைமையில், அப்பகுதி இளைஞா்கள் இணைந்து மரக்கன்று நட்டு, அவரின் உருவப் படம் முன்பு அஞ்சலி செலுத்தினா்.