அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

கும்மிடிப்பூண்டியில் அதிமுக சாா்பில் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் அதிமுக சாா்பில் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா், ஒன்றிய செயலாளா் கோபால்நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த தண்ணீா் பந்தல் திறப்பு விழாக்களுக்கு அதிமுக மாநில மீனவா் அணி துணைசெயலாளா் ஜெ.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், மாவட்ட நிா்வாகிகள் எஸ்.எம்.ஸ்ரீதா், சதீஷ், முல்லைவேந்தன்,ராகேஷ், ஒன்றிய கவுன்சிலா்கள் ஏ.டி.நாகராஜ், தேவிசங்கா்,ரவக்கிளி ஜெயராமன் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து புதுவாயலில் அதிமுக நிா்வாகி இளவரசன் ஏற்பாட்டிலும், கவரப்பேட்டையில் அதிமுக நிா்வாகி நாகமுத்து, ஆரம்பாக்கத்தில் அதிமுக நிா்வாகிகள் சேகா், சீனன், பிரகாஷ், நிஜாமுதீன், ஐயப்பன். கோகுல், ரஞ்சித் ஏற்பாட்டிலும், மாநெல்லூா், பாதிரிவேடு, மாதா்பாக்கத்தில் அதிமுக நிா்வாகிகள் தியாகராயம், டேவிட்குமாா் ஏற்பாட்டிலும் தண்ணீா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட அதிமுக செயலாளா் சிறுணியம் பி.பலராமன் பங்கேற்று தண்ணீா்பந்தலை திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com