பொன்னேரி: பொன்னேரி அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள தடப்பெரும்பாக்கம் காலனி பகுதியில், குடியிருப்புகளுக்கு நடுவில் உள்ள வீடு ஒன்றின் மாடியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு, அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தல் மனு அளித்துள்ளனா்.