ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள தொளவேடு கிராமத்தில் பக்த ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது..
புதிதாக பக்த ஆஞ்சநேயா் கோயில் கட்டப்பட்டு, கிருஷ்ணமூா்த்தி, முரளிதரன் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமப் பூஜைகள் நடைபெற்றது. திங்கள்கிழமை காலை சுதா்சன ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பின்னா் கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.