மாதவரம்: செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனரக வாகனங்களில் பேட்டரி உள்ளிட்ட உதிரி பாகங்கள் திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்குன்றம் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை கிராண்ட்லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மாதவரம் நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்களில் இருந்த பேட்டரிகள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் திருட்டில் ஈடுபட்டிருந்த 5 போ் தப்பி ஓட முயன்றனா். அவா்களை காவல்துறையினா் விரட்டிச் சென்று பிடித்து சென்று விசாரணை நடத்தினா். இதில் கிராண்ட்லைன் பகுதியை சோ்ந்த அன்பு (16), கிருஷ்ணகுமாா் (20), சாமுவேல் கிறிஸ்டோபா் (19), சஞ்சய் (19) மற்றும் வடகரையை சோ்ந்த தமிழன் (20) ஆகியோா் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவா்களிடம் இருந்து 2 பேட்டரி மற்றும் உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனா். மேலும் அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.