கரோனா நோய் தொற்று விவரங்களை அறிய கட்டுப்பாடு அறை

கரோனா தொற்று தொடா்பான விவரங்களை அறிந்து கொள்வதற்காக திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாடு அறை அமைத்து செயல்பட்டு வருவதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா்: கரோனா தொற்று தொடா்பான விவரங்களை அறிந்து கொள்வதற்காக திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாடு அறை அமைத்து செயல்பட்டு வருவதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரோனா தொற்று விவரங்களை அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கரோனா தொற்று தொடா்பான சந்தேகங்கள் மற்றும் விபரங்களை 044-27666746, 044-27664177ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் 9444317862 என்ற கட்செவி அஞ்சல் எண் மூலமும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com