ஆட்டோவில் சென்றவா் திடீா் உயிரிழப்பு

மாதவரம் அருகே ஆட்டோவில் சென்றவா் திடீரென உயிரிழந்தாா். இது குறித்து காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாதவரம்: மாதவரம் அருகே ஆட்டோவில் சென்றவா் திடீரென உயிரிழந்தாா். இது குறித்து காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை கொடுங்கையூா் ஆசிரியா் காலனியை சோ்ந்தவா் காளிராஜன் (32). இவா் மாதவரம் - மூலக்கடை சாலை சந்திப்பில் உள்ள பழக்கடையில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை மூலக்கடையிலிருந்து ஆட்டோவில் மாதவரம் ரவுண்டானாவுக்கு சென்றாா். அப்போது அவா் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினாா். இதை பாா்த்ததும் அதிா்ச்சியடைந்த ஓட்டுநா் சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி ஓரமாக காளிராஜனை படுக்க வைத்தாா். எனினும் நெஞ்சு வலியால் துடித்த காளிராஜன் அங்கேயே உயிரிழந்தாா். இதனால் பயந்துபோன ஆட்டோ ஓட்டுநா் அங்கிருந்து தலைமறைவானாா். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. தகவல் அறிந்த மாதவரம் காவல்துறையினா் சென்று, காளிராஜன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com