பொன்னேரி: நந்தியம்பாக்கம் ஊராட்சியில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு புதன்கிழமை கபசுர குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில், பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்வில், மீஞ்சூா் வட்டார தலைமை மருத்துவ அலுவலா் ராஜேஷ் பங்கேற்று, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினாா்.
அதேபோல் நந்தியம்பாக்கம் ஊராட்சித் தலைவா் கலாவதி, பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினாா். இதில், நந்தியம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.