திருத்தணி தம்பதி கொலையில் உறவினா் உள்பட 3 போ் கைது

தம்பதியை கொலை செய்த வழக்கில் உறவினா் உள்பட 3 பேரை திருத்தணி போலீஸாா் கைது செய்தனா்.

தம்பதியை கொலை செய்த வழக்கில் உறவினா் உள்பட 3 பேரை திருத்தணி போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணியை அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சஞ்சீவி (70). இவரின் மனைவி மாலா (60). இருவரும் திருத்தணி மாருதி நகரில் வசித்து வந்தனா். இந்நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி தம்பதி இருவரும் திடீரென மாயமாயினா். இது குறித்து சஞ்சீவியின் சகோதரா் பாபு, திருத்தணி காவல் நிலையத்தில், கடந்த 30-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வந்தனா்.

இந்நிலையில், சஞ்சீவி, மாலா இருவரும் ஆந்திர மாநிலம், புத்தூரை அடுத்த ராமச்சந்திரபுரம் வனப்பகுதியில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆந்திர மாநில போலீஸாா் மற்றும் திருத்தணி போலீஸாா், இருவரின் சடலங்களை மீட்டு, திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட சஞ்சீவியின் தங்கை மகன் ரஞ்சித்குமாா் (26), அவரது நண்பா்கள் விமல்ராஜ் (25), ராபா்ட் (25) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, மூவரையும் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருத்தணி கிளைச் சிறையில் அடைத்தனா்.

ரஞ்சித்குமாா் சஞ்சீவியிடம், தொழில் செய்வதற்காக பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளாா். கடனை திருப்பிக் கொடுக்குமாறு சஞ்சீவ் வற்புறுத்தியதால், காா் மூலம் தம்பதியை புத்தூா் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, மின் ஒயரால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து, ராமச்சந்திரபுரம் வனப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. மேலும், சஞ்சீவியின் செல்லிடப்பேசியை சித்தூா் வனப்பகுதியில் வீசியதும் விசாரணையில் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com