தோ்வழி தான்தோன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட தோ்வழி கிராமத்தில் உள்ள ஸ்ரீதாட்சாயணி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தோ்வழி தான்தோன்றீஸ்வா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
தோ்வழி தான்தோன்றீஸ்வா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட தோ்வழி கிராமத்தில் உள்ள ஸ்ரீதாட்சாயணி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், முதல் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜை, மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கலச புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, புனித நீா் கலசங்கள் அனைத்து கோபுரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ தாட்சாயணிசமேத தான்தோன்றீஸ்வரா், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சுப்பிரணியா், ஸ்ரீ சண்டேஸ்வரா், ஸ்ரீ பைரவா், நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, மகா அபிஷேகம் நடைபெற்று, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன், தோ்வழி ஊராட்சித் தலைவா் கிரிஜா குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் அமலா சரவணன் உள்ளிட்ட பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com